பல்லடம் அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான உடல் கூறு ஆய்வுகளும் செய்ய வேண்டும்…..

பல்லடம் வட்டாட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு தாலுக்கா மருத்துவமனையில் அனைத்து விதமான உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் மேலும் காலதாமதப்படுத்தாமல் உடற்கூறு ஆய்வை விரைந்து முடித்து தர வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் இறந்துவிட்ட நிலையில் அவரது உடலை பல்லடம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக 18 மணி நேரம் வைத்து அதன் பிறகு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாகவும் இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலும் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இந்த மனுவை வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் தாங்களோ தாங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களோ இறந்தாலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *