கும்பகோணத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமைக்கு நீதி கேட்டு விசிக முற்போக்கு மாணவர் சங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமைக்கு நீதி கேட்டு கும்பகோணம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழக அரசு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , மாணவிக்கு உரிய பாதுகாப்பு வழங்காத பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பள்ளி கல்லூரி மாணவர் பாதுகாப்பு குழு அமைத்து கல்லூரிகளிலும் அமைந்துள்ளதாக அவர் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வலியுறுத்தி யும், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் சங்கம் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *