பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் கைது.

பெரம்பலூர். டிச.30. அண்ணா ‌பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவியை கற்பழித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருந்தும் தடையை மீறி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் குற்றத்திற்கு எதிராக திமுக அரசை கண்டித்து இன்று பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட கழக செயலாளர் இளம்பை. தமிழ்ச்செல்வனை பேசவிடாமலே, பாதியிலேயே காவல்துறை கைது செய்து இவரோடு ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்திருக்கிறார்கள் போலீசார். இந்த செய்தி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *