திருவாரூரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா நிகழ்ச்சியில் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு கலைச்சேவை விருதினை தருமபுரம் ஆதீனம் வழங்கி கௌரவித்தார்.

திருவாரூர் சன்னதி தெருவில் தனியார் அமைப்பு சார்பில் மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது .
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் வாழ்த்துரை வழங்கினார் .

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது .
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்த விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலை சேவை விருதினை பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் ஆதினம் வழங்கினார்.

இதேபோல் ஆன்மீக சேவைக்காக உலக பிரசித்தி பெற்ற தியாகராஜ ஸ்வாமி கோவிலின் அறங்காவலர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார் .

தமிழ் சேவைக்கான விருதை புலவர் சந்திரசேகர் பெற்றார்.

மருத்துவ சேவை காண விருதை டாக்டர் கார்த்திகேயன் பெற்று கொண்டார்.

தொடர்ந்து உன்னி கிருஷ்ணன் பக்தி பாமாலை நிகழ்ச்சியில் பெருந்திரளானோர் பங்கேற்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *