பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420

பொங்கல் பண்டிகை: மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
தாராபுரம் அருகே தைப்பொங்கல் திருநாளில் பயன்படுத்தப்படும் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள்தான் தமிழ் கலாசாரத்தின் வெளிப்பாடாகவும் விவசாயிகளின் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மண்பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்கள் முதல் நகரங்களில் வரை இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மண் பானை முதல் பித்தளை பானை வரை பயன்படுத்தி பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர்.
பாரம்பரியமுறையில் மண் பானையில் பொங்கலிட்டு வழிபடுவது தமிழா்களின் வழக்கமாகும். தாராபுரம் அருகே உள்ள திருமண பாளையம் பகுதியில் 10-க்கும் மேற்பட்டோா் பல தலைமுறைகளாக மண்பாண்டங்கள் தயாரித்து வருகின்றனா்.
இங்கு தயாா் செய்யும் மண்பானை நிறத்திலும், திடத்திலும் வலிமையாக இருப்பது தனிச் சிறப்பாகும்.
இங்கு குடும்பத்துடன் மண் பானை செய்து வரும் இவா்கள் ஆண்டுதோறும் 6- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண் பானைகளை பொங்கல் திருநாளை முன்னிட்டு விற்பனை செய்து வருகின்றனா்.
சில மாதங்களாக பெய்த மழை காரணமாக மண் பானை தயாரிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால், தற்போது வெயில் அடிப்பதால் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
திருப்பூர்-கரூர்- திண்டுக்கல்-ஈரோடு கோவை மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் இங்கு நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளி. தண்டபாணி கூறியதாவது:
மூன்று தலைமுறைகளாக மண்பாண்டத் தொழிலை செய்து வருகிறோம். இயற்கையில் கிடைக்கும் களிமண்ணைக் கொண்டு மண்பாண்டங்களைத் தயாரிக்கிறோம். ஆனால், போதுமான களிமண் கிடைப்பதில்லை.
எங்களுக்குப்பிறகு எங்கள் சந்ததிகள் இந்தத் தொழிலில் ஈடுபட ஆா்வம் காட்டவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எங்களிடம் 10 போ் வேலை பாா்த்தனா். தற்போது 2-போ் மட்டுமே வேலை செய்கின்றனா்.
மண் பானை இயற்கை குளிா்பதன சாதனம் போல செயல்படும். மண் பானையில் இருக்கும் உணவுகளை சூடுபடுத்தத் தேவை இருக்காது. சீரான வெப்பநிலையை பராமரிக்கச் செய்கிறது. மேலும் கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு சற்று விற்பனை குறைவாக உள்ளது மேலும் மண் எடுப்பதில் அரசு பண கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் தற்பொழுது எங்களுக்கு மண் கிடைப்பதில் சில சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன என இவ்வாறு அவர் தெரிவித்தார்.