ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கொண்டனேரி கண்மாய் அருகே கம்மாப்ட்டி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜன் மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராஜா மாவட்ட செயலாளர் அம்மையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராஜபாளையம் பகுதியில் உள்ள கடம்பன்குளம், கொண்டநேரி அலப்பச்சேரி, திருச்சுழி, மருங்கூர், புதுக்குளம், புளியங்குளம், சமுசிகாபுரம் உள்பட பல்வேறு கண்மாய்களை சேர்ந்த ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விளைவித்துள்ள நெல் விவசாயிகள் இதனால் பயன்பெறுவர்.

நாள் ஒன்றுக்கு 800 மூட்டை திறனுடன் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிக மழை, கண்மாய்கள் செழிப்பு காரணமாக நெல் பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது.

எனவே விவசாயிகள் பயன் பெறும் வகையில் கொள்முதல் காலத்தை தேவைப்படும் காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *