சாணார்பட்டி அருகே தவசி மேடையில் புனித அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமடையில் புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 725 காளைகள்,350 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் சக்திவேல் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் மீனாதேவி,மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ. சுல்தான் பேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
கால்நடைகள் உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமையில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளை சோதனை செய்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரர்களை பரிசோதனை செய்து காளைகளை அடக்க அனுமதித்தனர்.

மாவட்ட பிரதீப் உத்தரவின் பேரில்,கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தெய்வம்,மகேஷ் மேற்பார்வையில்,போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன்,சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.பொன்குணசேகர் உள்பட 320 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *