பாபநாசத்தில் ஸ்ரீ அமிர்தவர்ஷினி சமேத ஸ்ரீ வர்ணஜலேஸ்வரர் ஆலய பாலாலயம்….

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலக வளாகம் முன்பு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ அமிர்தவர்ஷினி சமேத ஸ்ரீ வர்ணஜலேஸ்வரர் கோவிலின் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.

தேவதா அனுஞ்சை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்திபூஜை, விமானகலச ஆகர்சணம், யாகபூஜை, வேதபாராயணம், பூர்ணாஹுதி தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று விமானபாலாலயம் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் கிராமவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலைமணி குடும்பத்தினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *