திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தை அடுத்த ஆச்சியூர் கிராமம் துலுக்கனூரை சேர்ந்தவர் காளியப்பன் மகன் பழனிச்சாமி (வயது 69) விவசாயி, தனது மோட்டார்சைக்கிளில், தாராபுரம் பஸ் நிலையம் அருகே கார் ஸ்டாண்ட் மேம்பாலத்தின் கீழே பழனிச்சாமி சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்புறமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த பழனிச்சாமியின் தலைமீது லாரியின் சக்கரம் ஏறியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தனியார் சேம்பர் லாரியின் ஓட்டுனர் உண்டாரபட்டி கிராமம் குப்பனவலசு பிரகாஷ்(37) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.