திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு கருடன் காளைகள் சாதனை தி ண்டுக்கல் மாவட்டம் தவசி மடையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.

இந்த ஆலய திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம் இதன்படி இந்த ஜல்லிக்கட்டுவில் தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினரும் பாஜக பிரமுகருமான பிரதீபா ரெங்கபாபு இவர்களுக்கு சொந்தமான கருடன் ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் அபார வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை வென்றது. இது குறித்து பாஜக பிரமுகர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான பிரதீபா ரெங்கபாபு கூறும்போது இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட எங்களது ஜல்லிக்கட்டு கருடன் காளைகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்று தந்தது தேனி மாவட்டத்திற்கும் நமது கம்பம் புதுப்பட்டி கிராமத்திருக்கும் பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது இவ்வாறு அவர் கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *