பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 244 வது ஜெயந்தி துவக்க விழா தமிழகத்தின் தலைசிறந்த இசைக்கலைஞர்கள் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் அய்யம்பேட்டையில் ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் 244 வது ஜெயந்தி துவக்க விழா மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாலதி மஞ்சுளா , நளினி,ராயா சீனிவாசன், மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் கோபிநாதன், நாகராஜன்,சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.இதில் புவனகிரி விஷ்ணுபிரியா, வயலின் ஸ்ரீராம், அமிர்தவம் செந்தில்குமார் ஆகியோரின் இசை நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் சுவாமிகள் கமிட்டியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.