அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
பெரியஊர்சேரி, கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவ படத்திற்கு அ.இ.அ.தி.மு.க கிளைக் கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் செந்தில்குமார், கிளைக்கழக செயலாளர் சந்திரன், ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை, ஒன்றிய இணைச் செயலாளர் ரேவதி, ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் பாலமுருகன், மற்றும் நிர்வாகிகள் ஆறுமுகம், புவனேஷ், குமரேசன், ஞானசேகரன், பக்கிரி மொகம்மது,கோவில்பிச்சை, காமாட்சி, கிருஷ்ணபாண்டி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *