துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருச்சி விற்பனைக் குழு செயலர் சி.சொர்ணபாரதி தலைமையில் 04/03/2025 அன்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
இதில் உரிம இட ஆய்வாளர் அ.அன்புசெல்வி,மேற்பார்வையாளர் சி.மோகனா மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 554.38 குவிண்டால் பருத்தி ரூபாய் 37,78,396 க்கு ஏலம் விடப்பட்டது.அதிகபட்சம் ஒரு குவிண்டால் விலை ரூபாய் 7,689 க்கும்,குறைந்தபட்ச விலை ரூபாய் 6,099 க்கும் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் பெரம்பலூர், விழுப்புரம்,கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, கும்பகோணம், செம்பனார் கோயில்,பெரகம்பி, நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 12 வியாபாரிகள் மற்றும் சுமார் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்