நாமக்கல்.
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாளை காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு
தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென்பண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்தின் மூலம் இயக்கப்படும் லாரிகள் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடக தெலுங்கானா கேரளா பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு என்னை நிறுவன சேமிப்பு கிடங்கில் இருந்து எரிவாயுக்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துச் சென்று சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியில் காலாவதி ஆகிறது
இதனைத் தொடர்ந்து புதிய 39 கடந்த மார்ச் 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டனர் இதில் 21 டன் எடை கொண்ட மூன்று ஆட்சியில் லாரிகளுக்கு முன்னுரிமை லாரிகளில் கட்டாயம் ஓட்டுநர் உதவியாளர் இருக்க வேண்டும் சிறு தவறு என்றாலும் மூன்றாண்டு காலம் தடை என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதித்தன. இந்த நிலையில் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்
அப்போது இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சுமார் 4,000 லாரிகளை எண்ணெய் நிறுவன சேமிப்பு கிடங்கிலிருந்து எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு டேங்கர் லாரிகளில் எரிவாயுவை எடுத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றன. 2025-30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன.
இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது, மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுனர் இல்லாத பட்சத்தில் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
3 கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் தென்மண்டல அளவில் நாளை (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். தென் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளன.
வருவாய் இழப்பை காட்டிலும் வேலை வாய்ப்பு பறி போகக் கூடாது என்ற எண்ணத்திலேயே இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். எஎண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.