திருவொற்றியூர்.

சென்னை, எண்ணுார் ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு, அத்திப்பட்டில் இருந்து சென்னை நோக்கி ரயில் இஞ்சின் சென்றுக் கொண்டிருந்தது.

திடீரென, ரயில் இஞ்சினின் மின்சாரம் கடத்தும் கம்பி உடைந்து, உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவலறிந்து, ரயில்வே ஊழியர்கள், மாற்று இஞ்சின் மூலம், பழுதான ரயில் இஞ்சின் இழுத்து செல்லப்பட்டது.

மேலும், உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்ட, ரயில் இஞ்சினின் கம்பியை, பத்திரமாக மீட்டனர். இதனால், கும்மிடிபூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லக் கூடிய, மின்சார ரயில்கள் போக்குவரத்து, ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மாலை, 5:30 மணிக்கு பின், நிலைமை சீரடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *