மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக 1000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக தாமரைப்பாடி புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் POCSO நீதிபதி மாண்புமிகு.வேல்முருகன், தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு செயலாளர்.திரிவேணி வரவேற்புரையுடன், மாவட்ட வன அலுவலர்.ராஜ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்.ஜெயபாரதி, திட்ட அலுவலர்.திலகவதி, கோட்டாட்சியர்.சக்திவேல், வட்டாட்சியர்.மீனா தேவி,ராஜசேகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கள்.அண்ணாதுரை,சங்கர், கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை, பவித்ரா,காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல அரசு துறை அலுவலர்கள் பங்குபெற்று 100 மரக்கன்றுகளை நட்டனர். பொது மக்களுக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டும் பசுமை, மரங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தபட்டது.
இறுதியாக கந்தசாமி உதவி திட்ட அலுவலர் நன்றி கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர், முதல்வர், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *