வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு ஸ்ரீ குளுந்தாளம்மன் ( எ) பிடாரி அம்மன் ஆலயத்தேர் திருவிழாவை முன்னிட்டு காப்புகட்டுதலுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு வெள்ளாளர் தெரு ஸ்ரீ குளுந்தாளம்மன் (எ) பிடாரி அம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் நேற்று 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஆலயத்தில் கணபதி ஹோமமும், அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மதியம் 12- மணிக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 6- மணியளவில் குடமுருட்டி ஆற்றில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் மற்றும் வானவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெற்றது .நேற்று முதல் தினசரி அம்மன் வீதியுலா காட்சியும் நடைப்பெறுகிறது. வருகின்ற மே 13-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, 14 – ஆம் தேதி புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறுகிறது. 15- ந்தேதி வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும் , அம்மன் வீதியுலா காட்சியும் நடைப்பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கள்ளர் தெரு வாசிகள்,வெள்ளாளர் தெரு வாசிகள், அங்காளம்மன் கோவில் தெரு வாசிகள், வரதர்குளத்தெருவாசிகள் மற்றும் வலங்கைமான் நகர வாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இவ்வாலயத்தில் மாதந்தோறும் பெளர்ணமி அன்று மாலை 7 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.