சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பை வென்றெடுக்க சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் திருவிழா மாநாடு வருகின்ற 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மாநாட்டுக்குழ தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 65 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும், வன்னியர்களுக்கு மக்கள் தொகை, சமூக பின் தங்கிய நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு அனைத்து மக்களும் வரவேண்டும் என அழைப்பு விடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய பகுதிகளில் மாவட்ட பொறுப்பாளர் தாமரைக்கண்ணன் தலைமையில் குடவாசல் ஒன்றிய பொறுப்பாளர்கள் ‌குடவாசல் ஒன்றிய பகுதிகளான சிமிலி, காப்பனாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று அழைப்பிதழ் வழங்கினர்.

அப்போது குடும்பத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *