தாராபுரத்தில் ஆற்றில் குளிக்க சென்றபோது நீச்சல் தெரியாமல் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்தார்.. பள்ளி மாணவி காவியாவின் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து கதறி அழுத்து கல் நெஞ்சையும் கரையச் செய்வதாக இருந்தது,இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் துக்கையப்பன் தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், காவியா (வயது-15) கவின் (15)என்கிற இரட்டை குழந்தைகளும் இருந்துள்ளனர். அதில் காவியா தாராபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காவியா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தாராபுரம் கொழிஞ்சிவாடி தட்சிணாமூர்த்தி கோவில் பின்புறம் உள்ள அமராவதி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு அவரது பெற்றோர்கள் துணி துவைத்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது காவியா ஆற்றில் குளித்து கொண்டு இருந்துள்ளார். திடீரென ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் ஆற்றில் மூழ்கியுள்ளார். அவரை காணாது தவித்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆற்றில் இறங்கி தேடிப் பார்த்துள்ளனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு பின் காவியாவை ஆற்றுக்குள் இருந்து மீட்டுள்ளனர்.

பின்பு அவர்கள் காவியாவை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவியா ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். அதனை ஏற்க மறுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாராபுரத்தில் உள்ள மேலும் 2 தனியார் மருத்துவமனைக்கு காவியாவை கொண்டு சென்று உள்ளனர்.

அங்கும் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகவே தெரிவித்துள்ளனர். உடனே அவரது உடலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு காவியாவின் உடலை பிரேத மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவியாவின் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து கதறி அழுத்து கல் நெஞ்சையும் கரையச் செய்வதாக இருந்தது. இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *