தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் லீக் கார் பந்தய போட்டிகளுக்கன பந்தய கார் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது
சர்வதேச அளவில் பிரபலமான கார் பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்களை தயார் செய்யும் விதமாக கோவையில் விஷன் 4 மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் கரி ஸ்போர்ட்ஸ்,ஃபேப் ராலி ஸ்கூல் ஆகியோர் இணைந்து சியால் ஆட்டோ கிராஸ் லீக் போட்டிகள் நடைபெறுகிறது..
தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்களை தயார் செய்யும் விதமாக விஷன் 4 மோட்டார் ஸ்போர்ட்ஸ் புதிய பந்தய காரை வடிமைத்துள்ளனர்..
ரேஸ் டிராக்கில் ஓடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கார் முழுவதும் பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கார் அறிமுக விழா மலுமிச்சாம்பட்டி பகுதியில் இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
இதில் புதிய காரை அறிமுகம் செய்து வைத்த விஷன் 4 ஸ்போர்ட்ஸ் குழுவினர் கூறுகையில்,தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா,போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ள சியால் ஆட்டோ கிராஸ் லீக் போட்டிகளில் இந்த கார்களை வீர்ர்கள் ஓட்ட இருப்பதாகவும்,இதில் சிறந்த ஓட்டுனர்களை தேர்வு செய்து சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..