துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இந்திய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் நல சங்கம் சார்பில் துறையூர் தொகுதி சங்கத் தலைவர் பாபு என்கிற அ.சாகுல் ஹமீது தலைமையில் இரண்டாம் ஆண்டு தண்ணீர் பந்தல் மே-12ந் தேதி துவங்கப்பட்டு வெற்றிகரமாக 30 நாட்கள் கடந்து பௌர்ணமி நாள் (10/06/2025)அன்று நீர் மோர் வழங்கும் நிகழ்வு நிறைவு பெற்றது. நிறைவு நாளான அன்று கறிக்கடை பாலு சார்பில் நீர்மோர்,பானகம் வழங்கப்பட்டது.

இதில் சுமார் 500க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் நீர் மோர்,பானகம் அருந்தி மகிழ்ந்தனர்.இதில் மாவட்டத் தலைவர் எஸ் திருமுகம் ,செயலாளர் எம் பி டி சி கண்ணன், பொருளாளர் டிங்கர் செல்வம், துணை செயலாளர் அம்மன் பி கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் மீசை பாலு மற்றும் துறையூர் தொகுதி நிலத்தரகர்கள் சங்க செயலாளர் சி ராஜதுரை,பொருளாளர் ஏ எஸ் செந்தில்குமார், துணை தலைவர் அண்ணாமலை பாலு ,துணை செயலாளர் ஜி விவேக் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நில தரகர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டில் தொடர்ந்து 30 நாட்கள் நீர்மோர் வழங்க ஒத்துழைப்பு கொடுத்த இந்திய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொது மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சங்கத் தலைவர் சாகுல் ஹமீது தெரிவித்தார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *