மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் கடந்த 9 தேதி பயணிகளை பேருந் தில் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத் தில் அரசு பஸ் ஓட்டுனர் கணேசன் அரசு போக் குவரத்து கழக உதவி மேலாளர் காலனி தாக்கிய வீடியோ சமூகவலைத ளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மாரிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்இந்நிலையில் மாரிமுத்து தான் செய்த தவ றுக்கு மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகம் முழு வதிலும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து கடந்த 9 ம் தேதி திருப்பூர் நோக்கி செல்ல இருந்த அரசு பஸ்சை ஓட்டி வந்த தாராபுரம் காளிபாளையம் பகுதி சேர்ந்த அரசு ஓட்டுநரான கணேசன் என்பவரை ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் மாரிமுத்து மற்றும் அவருடன் அடை யாளம் தெரிந்த 4 பேர் கணேசனை காலணியால் தாக்கி அவதூறாக பேசிய தாக கூறி கணேசன் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ஒட்டு னர்கணேசன் அளித்த புகா ரின் கீழ் போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து மற்றும் அவருடன் இருந்த நான்கு பேர் மீதும் அரசு பணியாளரை தாக்கு தல், மிரட்டல், அசிங்கமாக பேசுதல், காயம் ஏற்படுத் துதல், கூட்டமாக சேர்த்து தாக்குதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *