பரமக்குடிஅருகே குழவி கொட்டியதில் 40பேர்காயம் மருத்துவமனையில் அனுமதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் மேல பெருங்கரை கிராமத்தில் 100-நாள் வேலைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை விஷக் குழவிகள் கடித்து தாக்கியதில் 40 பேர் காயமடைந்து பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் காயம் பட்டவர்களை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி,உரிய சிகிச்சையினை அளிக்க மருத்துவ நிர்வாகத்திற்கு அறிவுறித்தினார் .உடன் பரமக்குடி தலைமை மருத்துவர் டாக்டர் முத்தரசன் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, தெளிச்சாத்த நல்லூர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சேதுபதி காட்டுப் பரமக்குடி வார்டு செயலாளர் பாண்டி மாவட்ட பிரதிநிதி தியாகு மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் நெடுமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *