அரியலூரில் ராகுல் காந்தி பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார் நகர காங்கிரஸ் தலைவர் மா மு சிவகுமார் முன்னிலை வகித்தார் ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் மகாத்மா காந்தி பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பின்பு பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது வட்டார தலைவர்கள் கர்ணன் பாலகிருஷ்ணன் திருநாவுக்கரசு சக்திவேல் அருளானந்தம் கங்காதுரை மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆர் கே கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் வைப்பூர் சண்முகம் கலைச்செல்வன் மாவட்ட பொருளாளர் ராகவன் துணைத்தலைவர்கள் ஏபிஎஸ் பழனிச்சாமி சகுந்தலா தேவி ரேணுகாதேவி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலை பாலாஜி நகர நிர்வாகிகள் கொளஞ்சிநாதன் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *