குறவன்குளம் கிராமத்தில் ஸ்ரீ ஐயன் சுவாமி பனையடி கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா
அலங்காநல்லூர்,ஜூலை.08-
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ஐயன் சுவாமி, பனையடி கருப்பணசாமி, திருக்கோவில் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு கால யாகசாலை ஹோமங்களை தொடர்ந்து யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பனையடி கருப்பணசாமி கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.