பெரியகுளத்தில் இரண்டு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்பி தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளான அம்மாபுரம் அம்மாபட்டி சொக்கத்தேவன் பட்டி வட புதுப்பட்டி ஆகிய கிராமங்களின் வழியாக பெரிய குளத்திலிருந்து மாவட்டத் தலைநகரான தேனிக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் தொடர்ந்து தேனி எம்பி மற்றும் பெரியகுளம் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்

இதே போல் ஜி. கல்லுப்பட்டியில் இருந்து கெங்குவார் பட்டி தேவதானப்பட்டி சில்வார்பட்டி ஜெயமங்கலம் வைகை அணை வழியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சென்று தேனிக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்பி மற்றும் எம்எல்ஏ நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இவ்விரு வழித்தடங்களிலும் புதிய அரசு பேருந்துகளை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது

இதை எடுத்து தேனி அருகே சொக்கத்தேவன்பட்டி ஜி. கல்லுப்பட்டியில் புதிய வழித்தடத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் களை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் மேற்கண்ட இரண்டு வழித்தடங்களிலும் புதிய டவுன் பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு திமுக நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் பேரூராட்சி மன்ற தலைவர்கள் தாமரைக்குளம் ச. பால்பாண்டி தென்கரை வி நாகராஜ் வடுகபட்டி நடேசன். உள்பட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரகத் திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *