தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.98.90 லட்சத்தில் புதிய திட்டப் பணிகள்.

தாராபுரம் அடுத்த இடையின்கிணறு ஊராட்சியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதியான சூரியநல்லூர் ஊராட்சி, இடையன் கிணறு ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சர் கிராம் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 98.90 லட்சம் மதிப்பீட்டில் குண்டடம் முதல் தாராபுரம் திருப்பூர் சாலை வரை சாலை மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சங்கமித்திரை தலை மையில் அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன்,

அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

கயல்விழி செல்வராஜ், ஆகியோர் பூமி பூஜை செய்து மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்தனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய கழகச் செயலாளர் சந்திரசேகரன், மற்றும் முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *