எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
இ.பி.எப். பிரச்சனை சீர்காழியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு. தீபாவளி நேரத்தில் நகரிங்கும் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு பேச்சுவார்த்தை ஈடுபட்ட நகர மன்ற துணைத் தலைவர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இந்த 24 வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சீர்காழி நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்கள், மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் கொண்டு கொட்டப்படுகிறது.இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் மூலம் 72 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் தனியார் ஒப்பந்ததாரர் ஒப்பந்த பணி எடுத்து 72 தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுகான இ.பி.எப். ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், ஒப்பந்ததாரர் 13 சதவீதமும் அரசுக்கு கட்ட வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட 12 சதவீத பிடித்தத்தை இரண்டு மாதம் மட்டுமே தனியார் ஒப்பந்ததாரர் அரசுக்கு கட்டியதாகவும், ஒப்பந்ததாரர் கட்ட வேண்டிய 13 சதவீதம் தொகை கட்டாமல் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அறிந்த தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்தனர். இதனால் நகரில் பிரதான பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை அறிந்த நகர்மன்றத் துணைத் தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் முபாரக் மற்றும் ரஹமத்நிஷா பாரூக் முன்னிலையில் தற்காலிக தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தூய்மை பணியாளர்களிடம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்பொழுது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஈ.பி.எப். பலன்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பணிக்கு திரும்ப வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை ஏற்று தீபாவளி வரை தூய்மை பணியை மேற்கொள்வது என முடிவு செய்து எனவும் அடுத்த கட்ட நடவடிக்கையாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.