திருவாரூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம் ,அவரது உடலுக்கு திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி. கலைவாணன் மாலை அணிவித்து அரசு மரியாதை செய்தார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கரையாபாலையூர் ஊராட்சி ஆர்ப்பாவூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.இவரது மனைவி தமிழ்செல்வி (45). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த இருசக்கர வாகன விபத்தில் தமிழ்செல்வி படுகாயமடைந்தார் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

தமிழ்செல்வியின் இதயம், கிட்னி, கல்லீரல், 2 சிறுநீரகம்,ஆகியன சென்னை, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ்செல்வி உடலுக்கு திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் அரசு மரியாதை வழங்கப்பட்டு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் சத்யா, மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கேசவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *