துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் கண்ணனூர், ஆதனூர் ஊராட்சிகளுக்கு அக்டோபர் 09 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்.இதில்
இம்முகாமில் கண்ணனூர், ஆதனூர் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 15 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் துறையூர் வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி ரவிச்சந்திரன்,கண்ணனூர் குமார், இலக்கிய அணி லெனின்,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா,வருவாய் ஆய்வாளர்கள் இளவரசி, சுரேந்திரன் ,ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் செந்தில்குமார், ஊராட்சி செயலர்கள் வேல்முருகன், ராமர்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *