திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு 3.0 பிரச்சாரம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட சுகாதார அலுவலர் ஆணைக்கினங்க, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் அறிவுரையின்படி அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முகமது தாரிக் வழிகாட்டுதலின்படி புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு 3.0 பிரச்சாரம் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது,

அதனைத் தொடர்ந்து சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசியர்கள் பொன்னையா, விவேகானந்தன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் மருத்துவ பயனாளிகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரித்துவாரமங்கலம் மருத்துவ அலுவலர் முகமது தாரிக், மருத்துவ அலுவலர் கிறிஸ்டினா மற்றும் அரித்துவார மங்கலம் சுகாதார மேற்பார்வையாளர் கோபு, சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக் ராஜா, அரவிந்தன், பாலாஜி, மருந்தாளுனர் மணியம்மை, செவிலியர் விஜயலட்சுமி, மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *