பெரம்பலூர்.அக்.12. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அதனடிப்படையில், 16 தேர்வு மையங்களில் 56 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 4,528 நபர்கள் விண்ணப்பிதத்திருந்த நிலையில், 4,280 நபர்கள் தேர்வெழுதினார்கள்.
ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்வர்கள் முறையான நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை வைத்துள்ளார்களா என்று பார்வையிட்டார். மேலும்,
தேர்வு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.