திருப்பத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள அணையா விளக்கு தெருவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்டவை குறித்து கேட்டு அறிந்தார். அப்போது உடன் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில், அரசு மருத்துவர்கள் உதவும் உள்ளங்கள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்