நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளையின் 2022-23ம் வருட பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜேபி (எ) ஜெயபிரகாஷ் தலைமையில் இராசிபுரத்தில் நடைபெற்றது.

துணை தலைவர் நந்தலால் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், இராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம், மாவட்ட அரங்காவலர் குழு தலைவர் அரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் பேசிய பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் பேரமைப்பிற்கு தொடர்ந்து முழு ஆதரவும் ஒத்துழைப்பு நல்கிவரும் இராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

விழா நிறைவில் அறக்கட்டளையின் பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *