ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

கர்நாடகா சென்ற தமிழக முதலமைச்சர் காவிரி நீர் குறித்து எதிர்ப்பை பதிவு செய்யாததை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் ஆவேசம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்றைய தினம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு நிலையம் முகப்பு வாயிலில் அண்ணா திமுகவின் அமைப்பு செயலாளரும் மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் கண்டன உரையில் பேசும்போது பேசியதாவது

பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது . கேஸ் சிலிண்டருக்கு மாதம் தோறும் 100 ரூபாய், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது போன்ற. பொய்யான 520 வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மகளிர் தனியாக சாலையில் செல்ல இயலாத நிலை நிலவி வருகிறது

கடைமடை வரை முறையாக நீர் பாயாவதால் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. பயிர்கள் கருகி வருகின்றன. கிளை வாய்க்கால்களுக்கு நீர் பாய்ந்தால்தான் சாகுபடி செய்ய முடியும் என்பது ஸ்டாலினுக்கு தெரியாது. குறுவை பொய்த்து விட்ட நிலையில் சம்பா சாகுபடியாவது நடைபெறுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்திற்கு தரவேண்டிய 27 டி எம் சி நீரை கொடுத்தால் தான் கலந்து கொள்வேன் என்று எச்சரிக்கை விடாமல், நீர் குறித்து வாய் திறக்காமல் தமிழகம் திரும்பி உள்ளார். அதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

தொடர்ந்து விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் சிவா ராஜமாணிக்கம் டாக்டர் கோபால் உள்பட மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஒன்றிய நகர கிளைக் கழக வட்டக் கழக உள்பட ஏராளமான பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *