எஸ்.செல்வகுமார். செய்தியாளர்

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி இரண்டாம் நாள் விழா.
1008 சங்காபிஷேகம் .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரமபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா தொடங்கி நடைபெறுகிறது. இரண்டாவது நாளாக பிரம்மபுரீஸ்வர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

முன்னதாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தருமபுபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள,தாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுவாமிக்கு புனித நீர் கொண்டு அபிஷேகமும் தொடர்ந்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் சங்காபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருநிலை நாயகி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *