வலங்கைமான் அருகே உள்ள தென்குவளைவேலியில்
பெண்ணை மண் வெட்டியால் வெட்டிய வாலிபர்கைது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தென்குவளைவேலியைசேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் குருமூர்த்தி (26), இந்நிலையில் சண்முகத்திற்கும், அதே
பகுதியைச் சேர்ந்த மலர்என்பவருக்கும் இடையே
தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த மலரை,
குருமூர்த்தி மண் வெட்டியால் வெட்டி யுள்ளார். இதில் பலத்த
காயமடைந்த மலரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்துபுகாரின் பேரில், வலங்கைமான் போலீஸ்
இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமூர்த்தியை
கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *