எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பத்திரகாளியம்மன் கோயில் ஆடி மாத உற்சவம் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து வழிபாடு அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கடந்த 12-ம் தேதி புதன்கிழமை காப்பு கட்டி உற்சவம் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சீர்காழி , மணிகூண்டு மங்கையர்க்கரசி விநாயகர் கோயிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

அதேபோல் அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயிலில் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *