நாமக்கல்

மலைவாழ் மக்கள் குறவர் இன மக்கள் அருந்ததியர் இன மக்கள் இலவச பட்டா கேட்டு இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சித் தலைவருக்கு மனு கொடுத்தனர்

நாமக்கல் மாவட்டம் முத்துகாம்பட்டி மூன்றாவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் கா முத்து தலைமையில் இன்று அவர் ஊர் மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சார் உமாவிடம் ஒரு மனு கொடுத்தனர்

அந்த மனுவில் கா முத்து குறிப்பிட்டு இருப்பதாவது இந்த ஊரில் நான் பொது சேவை செய்து வருகிறேன் எங்கள் பகுதியில் வாழும் ஏழை எளிய மலைவாழ் மக்கள் மற்றும் குறவறை இன மக்கள் மற்றும் அருந்ததியர் மக்கள் குடியிருக்க வீடு இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்

இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மனு கொடுத்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை அதற்கு அந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பாக இருக்கிறார்கள்

அவர்கள் குறிப்பிட்ட இடத்தை இந்த ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க பட்டா போட்டு கொடுக்கும்படி கேட்டால் அதற்கு அந்த நபர்கள் இடையூறு செய்து கொண்டிருக்கிறார்கள்

ஆகவே நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் இதில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்த ஏழை எளிய மலைவாழ் மக்கள் மற்றும் குறவர் என அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *