ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு முகாமினை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ தெரிவித்ததாவது.
திருவாரூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. தற்பொழுது முதல் கட்டமாக, இன்றைய தினம் (24.07.2023) முதல் 04.08.2023 வரை மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய வருவாய் வட்டங்களில், அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய 380 நியாய விலைக் கடைப்பகுதியில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 712 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 524 இடங்களில் நடைபெற்றுவருகிறது.

இப்பதிவு முகாம்களுக்கு 524 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களும், 524 உதவி மைய அலுவலர்களும், 88 மண்டல அலுவலர்களும், 35 கண்காணிப்பு அலுவலர்களும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக்கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணபத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது

விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும் பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்துவருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிட்டுள்ள நாளன்று விண்ணப்பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் (தொலைபேசி எண்.04366-1077) ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பாபா கோபால்சுவாமி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் .சங்கீதா, வட்டாட்சியர் நக்கீரன் திருவாரூர் நகராட்சி மேலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *