தருமபுரி மாவட்டம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமினை துவக்கி வைத்த பி்ன்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தமிழகம் முழுமைக்கான திட்டமாக இருந்தாலும் 34 ஆண்டுகளுக்கு முன்னர் 1989 ம் வருடம் கலஞர் அவர்கள் மகளிர் சுய உதவி குழு திட்டத்தை தொங்கபட்டது..
கலைஞர் அவர்கள் விததை்த திட்டம் தான், 4 லட்சத்து 57 ஆயிர்ம் மகளிர் சுய உதவி குழுக்கள் இருந்து வருகிறது..
தான் துணை முதல்வராக,உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது சுழல் நிதி, வங்கி கடன் வழங்கினோம்.. அரசு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அரசு திட்டங்களை துவங்கி வைக்கும் போது பயனாளிகள் சிலருக்கு மட்டுமே உதவிகள் வழங்படும், ஆனால் தான் எல்லோருக்கும் உதவிகளை வழங்கிவி்ட்டு செல்வேன்.. அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு விதை போட்ட மண் இந்த தருமபுரி மண், தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் சென்று சேரும் என்பதால் இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் இங்கே துவங்கி லைக்கப்பட்டிருப்பதாக பெருமிதம்..
நிதி நிலமை மோசமாக நெருக்கடி நிலையில் இருந்த நிலையில் கோட்டைக்கு சென்ற முதலில் இட்ட கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி.. மகளிர்கள், மாணவிகளுக்கு என சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது..
சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்ந்து சத்துணவை வழங்கியவர் தான் கலைஞர் காலை சிற்றுண்டி உண்ணாமல் காலை நேரத்தில் பசியோடு வரும் குழநதைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது, இரண்டு மாணாக்கர்கள் பயன்பெற்று வந்த திட்டதினை விரிவு படுத்தபடவுள்ளது இதனால் 18 லட்சம் மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள்.
தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இப்பேது நிறைவேற்றபட்டிருக்கிறது, சிறு வியாபாரம், வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் பெண்கள், விழிம்பு நிலை பெண்கள் என யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேபை்படுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும், செப்டம்பர் 15 ம் தேதி பெண்களுகளின் கைகளுக்கு உரிமை தொகை.வழங்கபடும்,
மகிளர் உரிமை தொகை திட்டத்தினை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது, தவிர கொரோனா தொற்றால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதையெல்லாம் கடந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன் அது தான்.ஸ்டாலினின் பணி நம்பிக்கையோடு வாக்களித்தவர்க்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே நல்லாட்சி வழங்குவோம் ..பெண்கள் சுய மரியாதையோட வாழ இந்த திட்டம் பெரும் துணையாக உதவியாக இருக்கும்..
கலைஞர் மகளி்ர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் வாங்க சிறப்பு முகாம்கள் துவங்கபட்டிருக்கிறது, விடுமுறை தினமான சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில விண்ணப்பங்கள் பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது.. தகுதியுள்ள பயனாளிகள் யாரும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது, எல்ராருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி
விழாவில் அமைச்சர்கள், எம். ஆர். கே பன்னீர்செல்வம், கே. என். நேரு. பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே. மணி. மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்