நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஹை- டெக் ரோட்டரி சங்கத்தின் 2023,24 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கொங்கு சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

திருச்செங்கோடு ஹை-டெக் ரோட்டரி சங்கத்தின் 2023,24 ம் ஆண்டு புதிய தலைவராக பொறியாளர் கண்ணன், செயலாளராக சிதம்பரம்,பொருளாளராக ,பிரவீன் குமார் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்,

2982 ரோட்டரி மாவட்ட ஆளுநர் மேஜர் டோனர் எஸ். ராகவன், மற்றும் மாவட்ட ஆளுநர் நியமனம் பி. சிவசுந்தரம் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்

நிகழ்ச்சியில் ரூ 100000.00 மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்த நலத்திட்டங்களில் அரசு மருத்துவமனைக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான இயந்திரம்,மற்றும் தையல் இயந்திரம்,மற்றும் கல்வி உதவித்தொகை மற்றும் ரூ 10000.00, தூய்மை காவலர்களுக்கு சீருடை போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது,

மேலும் முன்னாள் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டி நன்றி தெரிவிக்கபட்டது இந்த விழாவில் ரோட்டரி அங்கத்தினர்கள்,பொதுமக்கள்,பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த விழாவை திட்ட இயக்குனர் ஏ. வெங்கடேஸ்வரன் மற்றும் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *