அலங்காநல்லூர்,

மதுரை மேற்கு ஒன்றியம் சத்திரப்பட்டி அருகே உள்ள கல்லம்பட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.

மேலதாளம் முழங்க நடைபெற்ற இந்த விழாவில் மங்கள இசை, அனுக்ஷை ஹோமம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாஜனம், மஹா கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், அதை தொடர்ந்து மகா பூர்னாஹிதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் யாகசாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகி செந்தில்குமார் மற்றும் திருப்பணி குழு, மற்றும் விழாக்குழு செய்திருந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *