எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தேனியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.27வது குருமகா சன்னிதானம் முன்னிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி சரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தேனூர் கிராமத்தில் பழமையான தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தேனியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீவீரன், ஸ்ரீ சப்த மாதர்கள், ஸ்ரீ கன்னியம்மன் முதலான பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ தேனியம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி கணபதி பூஜை, கோ பூஜை, கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால பூஜை நிறைவுபெற்று யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு மேல தாலங்கள் முழங்க கோவிலை வலம்வந்து விமான கும்பாபிஷேகமும், மூலவருக்கு அபிஷேகமும் தருமபுரம் ஆதினம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் தேனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.