கால்பந்து போட்டியில் தங்கபதக்கம் வென்ற அணியினருக்கு பாராட்டு விழா

சோழவந்தான்

மதுரை மாவட்ட அளவிலான சிபிஎஸ்சி பள்ளிகளுகிடையே நடந்த கால்பந்து போட்டியில் வென்று தங்கபதக்கம் பெற்ற கல்வி சர்வதேச பள்ளி பொதுபள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது

மதுரை வாடிப்பட்டி தாய் சி.பி.ஸ்.இ பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி வாடிப்பட்டி தாய் சிபிஎஸ்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சோழவந்தான் அருகே நகரி ராயபுரம். கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் வெற்றி பெற்று தங்கபதக்கம் பெற்றனர்.

போட்டியில் பங்குபெற்று வெற்றியடைந்த அணியைசேர்ந்த மாணவர்களை பள்ளி தாளாளார் செந்தில்குமார் பள்ளியின் கால்பந்து பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி துறை ஆசிரியர்கள் .தேவா .சரவணபாலஜி, .முகேஷ், .கார்த்திக் மற்றும், பள்ளி முதல்வர், ஆசிரியர் என பலர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *