திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி அத்தா மஹாலில் காய்தே மில்லத் அறக்கட்டளை நிறுவனர் அஜ்மத் அலி தலைமையில் ஆதார் சேவை திருத்த முகாம் நிகழ்ச்சி நடைபெற்றன..
தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் பொருட்டு 18 வது வார்டு கவுன்சிலரும் காயிதே மில்லத் அறக்கட்டளை நிறுவனமான அஜ்மத் அலி தலைமையில் குறைந்த செலவில் ஆதார் புதுப்பித்தல் ஆதார் அட்டை பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை செய்து கொள்வதற்காக ஆதார் திருத்த முகம் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்த முகாமில் ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிழை திருத்தங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை செய்து கொண்டனர். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களானபொன்.முருகானந்தம், மன்சூர் உசேன், சின்னவர் என்ற அஜ்மத்அலி,ஹக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குறைந்த செலவில் பொதுமக்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை செய்து வரும் நிலையில் ஆதார் மையத்தில் புரட்சி ஏற்படுத்துவதற்காக மக்கள் சேவை செய்து வரும் 18-வது வார்டு கவுன்சிலரும் காயிதே மில்லத் அறக்கட்டளை நிறுவனரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொருளாளருமான அஜ்மத் அலிக்கு தொடர்ந்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்