திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம். மற்றும் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம். ஆகியவை இணைந்து மாநில அளவிலான யோகாசனம் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாணவர்கள் யோகாசன நிகழ்வில் தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர்.

தொடர்ந்து 48வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் மற்றும் 33வது தமிழ்நாடு யோகா ரேங்கிங் சாம்பியன்ஷிப் 42 ஆவது தேசிய யோகா சாம்பியன்ஷிப் தேர்வு ஆகியவை மூலம் யோகாசன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து இந்நிகழ்வில் கரிகாலன் மற்றும் அரவிந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.

மேலும் இந்நிகழ்வில் அஜ்மத் அலி,செந்தில், பொன்.முருகானந்தம், மன்சூர் உசேன், சின்னவர் என்று
அஜ்மத் அலி, ஹக்கீம், அதிமுக ராஜா முகமது உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்து யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *