திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்நிகழ்வில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான ஆட்சி கூட்டணி மாபெரும் வெற்றி அடையும் என்றும் தொடர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அதிமுக ஆட்சியில் செய்து தந்துள்ளதாகவும் தற்போது அவையெல்லாம் பராமரிக்க கூட நிலை இல்லாத சூழ்நிலை காணப்பட்டு வருவதாகவும்

தொடர்ந்து தமிழகத்தில் திமுக ஆட்சி இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்றும் வேலையில்லாமல் இளைஞர்கள் மாணவர்கள் காணப்பட்டு வருவதாகவும்

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அதிமுக ஆதரிப்பதாகவும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்றி மாபெரும் வெற்றி வாய்ப்பை எடப்பாடியார் தலைமையில் முன்னெடுப்பதாகவும் கூறினார்மேலும் தனியார் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *