விழுப்புரம்:- திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவாசியகள் மற்றும் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஸ்வ யுவக் கேந்திரா மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரீட்ஸ் நிறுவனம் இணைந்து விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சியை திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா துவக்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் நேரில் பார்வையிட்டு, பல்வேறு தொழிலதிபர்கள் நேரில் வந்து பயிற்ச்சி வழங்கினர்.
இந்த பயிற்சியில் விவசாயிகள் விளைவிக்கும் வழிமுறைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது, இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் மாவட்ட விவசாயிகள் பிரிவு இணை இயக்குனர் சத்தியமூர்த்தி , எய்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் ஸ்ரீதரன், முதன்மை நிர்வாக அதிகாரி தரணி முரளிதரன், முதலீட்டாளர் அசோக், (TNSTC) டிஎன்எஸ்டிசி திட்ட மேலாளர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி கூட்டத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து பயிற்சிகள் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்வதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.