தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசனின் கொடிசியா அரங்கில் மூன்றாவது எடிஷனாக நடைபெற உள்ள வெட்டிங் டுடே திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சி அறிமுக விழா கோவையில் நடைபெற்றது…

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் தி ஈவன்ட்ஸ் மேனேஜர்ஸ் சங்கம் சார்பாக வரும் 30 ந்தேதி துவங்கி ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1,2 ஆகிய மூன்று நாட்கள் வெட்டிங் டுடே எனும் திருமண வைபவ கண்காட்சி நடைபெற உள்ளது.


திருமண நிகழ்வுகளுக்கான பிரத்யேக கண்காட்சியாக மூன்றாவது எடிசனாக நடைபெற உள்ள இதில், நகைகள், புத்தாடைகள், இசைக் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், கேட்டரிங் நிறுவனங்கள், வெட்டிங் ப்ளேனர்ஸ், டெக்கரேட்டர்ஸ், திருமண நிகழ்விற்கு பயன்படும் ஹெலிகாப்டர், லக்சரி கார்கள் தரும் நிறுவனங்கள் , ஆடல் & பாடல் கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள் போன்ற திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான அம்சங்களும் ஒரே கூரையின் கீழ் அமைய உள்ளது.

இந்நிலையில்.இந்த கண்காட்சிக்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது…இதில் சிறப்பு விருந்தினர்களாக,நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணகுமார்,இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி கண்ணையன்,சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில் விஸ்வநாதன்,வில்வா ஜுவல்லர்ஸ் நிறுவனர் விஜயகுமார்,விஸ்வா தேவ்ஜி டயமண்ட்ஸ் துணை தலைவர் செல்வம்,அரோமா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி கண்ணன்,ஆகியோர் கலந்து கொண்டு கண காட்சி லோகோவை வெளியிட்டனர்..

இந்நிகழ்ச்சியில் தி.இந்து நாளிதழின் பொது மேலாளர் சிவக்குமார்,மலையாள மனோரமா மண்டல பொது மேலாளர் ராஜேஷ் கே நாயர்,டார்ஷா லக்சுரி ரிசார்ட்ஸ் பொது மேலாளர் சத்யா,கிராண்ட் ரீஜண்ட் பொது மேலாளர் ரமேஷ்,ரெசிடென்சி ஓட்டல்ஸ் பொது மேலாளர் சார்லஸ் ஃபேபியன்,தமிழ்நாடு ஈவென்ட்ஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் தலைவர் வசந்த் கே கோபால்,துணை தலைவர் ராஜன், வெட்டிங் டுடே கண்காட்சி தலைவர் செந்தில் குமார்,துணை தலைவர்கள் சரவணன், செந்தில் குமார்,உட்பட திருமண நிகழ்ச்சியை திட்டமிடுபவர்கள, அலங்காரம் செய்வோர், ஆடை வாடிவமைப்பாளர்கள், மலர் அலங்காரம் செய்வோர், திருமண அமைப்பாளர்கள் . போட்டோர்கிராபர்கள, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *